விஜய்யை ஏமாற்றும் அமலாபால்! தலைவா கதையும் - காதலும்!


விஜய்யின் பிறந்தநாளோடு, தலைவா படத்தின் டிரெய்லர், பாடல் வெற்றியையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள் விஜய்யின் ரசிகர்கள். டிரெய்லரால் ஆச்சர்யப்பட்டு, படத்தை எதிர்பார்த்து ஒருவித சூட்டுடன் இருந்த ரசிகர்களை, விஜய் குரலில் பாடியுள்ள ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடல் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டது எனலாம்.

தலைவா ஆகஸ்டு மாதம் தான் ரிலீஸ் என்றாலும், திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் இப்போதே வெளியாக துவங்கிவிட்டன கோடம்பாக்கத்தில். ஆஸ்திரேலியாவில் ‘நடனமே!’ என தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் வெங்கட்(விஜய்), இந்தியாவிற்கு வந்து எதிர்பாராத விதமாக சில பிரச்சனைகளில் சிக்கி பெரிய ஆளாகிவிடுவது டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் இருக்கும் வெங்கட்டை ஏமாற்றி இந்தியாவிற்கு அழைத்துவர அனுப்பப்பட்டவர்தானாம், எல்லா காட்சிகளிலும் சைலண்டாக வெங்கட்டுக்கு பின்புறத்தில் நிற்கும் பூர்ணி(அமலாபால்). விஜய்யை ஏமாற்றும்போது வழக்கம்போல அமலாபால் காதலில் விழுந்துவிடுகிறாராம்.

இப்படி விஜய்யை ஏமாற்றுவது, காதலிப்பது என படத்தில் அமலாபால் பல லூட்டிகள் அடித்தாலும், கேமரா ஓடாத நேரங்களில் விஜய்யிடம் அமலாபால் எது கேட்டாலும் “ என்னம்மா. சொல்லும்மா. ஆமாம்மா” என கனிவாக பேசுவாறாம் விஜய்.

இப்படி ஒரு நடிகருடன் நடித்ததை நினைத்து நினைத்து மகிழ்ச்சியடைந்துகொள்ளும் அமலாபாலை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று. தலைவா திரைப்படத்தில் அமலாபால் சொந்த குரலிலேயே பேசியுள்ளாராம். டப்பிங்கின் கடைசி நாளில் முதல்முறையாக சொந்தக் குரலில் பேசுவது குறித்து மிகவும் நெகிழ்ந்துபோனாராம் அமலாபால்.

தலைவா திரைப்படத்தின் புக்கிங் ரகசியமாக பல இடங்களில் நடந்துவருகிறதாம். தலைவா திரைப்படத்தை எங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்கிறோம் என பல தியேட்டர் ஓனர்கள் படத்தை வெளியிடுபவர்களிடம் அட்வான்ஸ் புக்கிங் செய்துவருவதாக தகவல்.

Labels:



Leave A Comment:

Powered by Blogger.