துவங்கியது விஜய் பட பிரச்சனைகள்! தடைகளை தாண்டுமா ’தலைவா’?

விஜய் நடித்த துப்பாக்கி படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சொல்லித் தெரிய வேண்டியதல்ல. துப்பாக்கி திரைபப்டத்தில் எதிர்கொண்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி, தலைவா திரைப்படத்தை எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் நல்லபடியாக ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதில் எச்சரிக்கையுடன் இருந்தது தலைவா படக்குழு. 

சில அரசியல் காரணங்களால் விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சியையே நடத்தவிடாமல் செய்துவிட்டதால், தலைவா இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடக்காமல் மிகவும் சாதாரணமாக நடத்தப்பட்டது (ரோட்ல ஒரு பேனர் கூட வெக்கல). 

ஒரு பக்கம் தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் பத்திரிக்கைகளில் தலைவா திரைப்படத்தின் புரமோஷன் வெகு பரபரப்பாக நடைபெற, மறுபக்கம் சைலண்டாக தணிக்கைத் துறைக்கு தலைவா திரையிடப்பட்டிருக்கிறது. தலைவா திரைப்படத்தை பார்த்த தணிக்கை துறையினர் வன்முறையான சண்டைக் காட்சிகள் இருப்பதால் தடாலடியாக ’A' சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டார்களாம்.

அதன்பிறகு தணிக்கைக் குழுவின் சில நிபந்தனைகளுக்கு(சில காட்சிகளை வெட்ட) உட்படுவதாக தலைவா டீம் கூறியபிறகும் கூட 'UA' சான்றிதழ் தான் கொடுக்கமுடியும் என்று கறாராக சொல்லிவிட்டார்களாம்.

சர்டிஃபிகேட் வாங்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்பதாலும், இவ்வளவு பெரிய மெகா பட்ஜெட் படத்திற்கு வரி விதித்தால் பல கோடிகள் பணம் வரியாக செலுத்தவேண்டும் என்பதாலும் தமிழக அரசின் ரிவிஷன் கமிட்டியிடம் முறையிட இருக்கிறதாம் தலைவா டீம்.

அங்கும் UA சர்டிஃபிகேட் கிடைத்தால் ஸ்ட்ரைட்டாக மும்பைக்கு சென்று U சர்டிஃபிகேட்டுக்கு முறையிடவிருக்கிறார்களாம். விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பதால் வேந்தர் மூவீஸ் தலைவா திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை பெரிய விலைக்கு வாங்கியது. 

சமீப காலமாக விஜய்யின் செல்வாக்கை உடைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் வேந்தர் மூவீஸின் உரிமையாளரான பாரிவேந்தர் பச்சைமுத்துவின் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்டு 9-ஆம் தேதி தலைவா திரைப்படத்தை பார்க்க ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களை மகிழ்விக்க தடைகளை தாண்டுமா தலைவா?

Labels:



Leave A Comment:

Powered by Blogger.