சிவகார்த்திகேயன் - பிந்து மாதவி காதல்! விவாகரத்து கேட்கிறாரா சிவகார்த்திகேயன்?

ருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்காக தற்போது மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் புரமோஷனல் டூர் மேற்கொண்டுவருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். கலகலப்பான நடிகராக த்மிழ்த் திரையுலக ரசிகர்கள் பலரின் மனதிலும் இடம்பிடித்துவிட்ட சிவகார்த்திகேயன், ஒரு பெண்ணின் மனதிற்கு நிரந்தர சொந்தக்காரன் என்பது பலருக்கு தெரியாது.


தனக்கு திருமணமான விஷயத்தைப் பற்றி பொதுவாகவே எந்த நிகழ்ச்சியிலும் பேசியதில்லை என்பதோடு, தெரிந்தவர்கள் கேட்டால் இது போல் வெளியே வருவது என் மனைவிக்கு பிடிக்காது என்று அடக்கமாக சொல்லிவிடுவாராம் சிவகார்த்திகேயன். எப்போதும் சரவெடி மாதிரி கலகலப்பாக பேசும் சிவகார்த்திகேயனுக்குத்தான் விவாகரத்து வரை செல்லும் அளவிற்கு பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாக பேசப்படுகிறது.

’பகலில் பக்கம் பார்த்து பேசு. இரவில் அதுவும் பேசாதே’ என்ற பழமொழிக்கு எதிராக சிவகார்த்திகேயன் வீட்டில் இரவெல்லாம் ஒரே கூச்சலும் சண்டையுமாய் இருந்திருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கும், நடிகை பிந்து மாதவிக்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டதாக ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் பரவ, இந்த செய்தி வளசரவாக்கத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்திக்கும் தெரிந்துவிட்டதாம்.


பிந்து மாதவியுடனான காதல் குறித்து தினமும் சிவகார்த்திகேயன் வீட்டில் சண்டை நடந்து அந்த ஏரியாவையே அமர்க்களப்படுத்தியதால், சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமானவர்கள் பிரச்சனை குறித்து விசாரித்திருக்கின்றனர். அப்போது ஒருவரிடம் சிவகார்த்திகேயன் விவாகரத்து குறித்து ஆலோசித்ததாக கோடம்பாக்கமே பரபரக்கிறது.

சிவகார்த்திகேயனும், பிந்து மாதவியும் ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் பிந்து மாதவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதற்கு சிவகார்த்திகேயனின் முயற்சி தான் காரணம் என்று பரவிய தகவலால் தான் பிரச்சனை என்றும் பேசப்படுகிறது.


தனக்கு வரும் ஃபோன் கால்களை சிவகார்த்திகேயன் எடுக்காததற்கு காரணம் இது குறித்து பேச விருப்பமில்லாமலா? அல்லது இன்று சிவகார்த்திகேயனின் திருமண நாள் என்பதாலா? என்று கோடம்பாக்கத்திலேயே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

Labels:



Leave A Comment:

Powered by Blogger.