"தலைவா" விமர்சனம்




தலைவா ..

கால் கிலோ பாட்ஷா, கால் கிலோ நாயகன், கால் கிலோ தேவர்மகன், கால் கிலோ சொந்த சரக்கு என கலந்து கட்டி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் விஜய்.. ஆனால் தன்னுடைய அசாத்திய ஆட்டம், பாட்டம், அதிரடியால் ஒரு அற்ப்புத படமாகவே கொடுத்துள்ளார் இளைய தளபதி விஜய்...

மருந்துக்கு கூட, ஏன் ஒரு காட்சியில் கூட தமிழ் நாடு காட்டப்படவே இல்ல, பிறகு ஏன் இங்க தடை.. விஸ்வா பாய் என்று விஜயை அழைப்பதை தவிர மத ரீதியான எந்த அடையாளமும் இல்லை. குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த அரசியல் தாக்குதலும் இல்லை... ஏன் தடைன்னு ஒன்னும் புரியல ..

ஆனா ஒன்னு தடையே இந்த படத்த இன்னும் ஓடவைக்கும் போல..

சரி கதைக்கு வருவோம்..

மும்பை தாராவி பகுதி "அண்ணா" சத்யராஜ். மும்பை தாராவியில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்பவராக சத்யராஜ். அதனால் பிரபல தாதாவால் சுட்டுக்கொல்ல முயல்கையில் அவரின் மனைவி ரேகா துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்து போகிறார். ரௌத்ரமான சத்தியராஜ் அந்த தாதாவை போட்டுத் தள்ளிவிட்டு தான் தாதாவாக மாறுகிறார்.தம் மகனான ஐந்து வயது விஸ்வா(விஜய்)வுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அவரை நாசரிடம் கொடுத்து,தான் யார் என்பதே தெரியக்கூடாது என்று சொல்லி ஆஸ்த்ரேலியா அனுப்பி விடுகிறார்.

பிறகு அண்ணா'வான சத்யராஜ் தாராவி மக்களுக்கு தலைவனாக தொண்டு செய்கிறார். தலை மறைவு வாழ்க்கையும் நடத்துகிறார்.

அங்கு ஆஸ்திரேலியாவில் விஜய் குடி தண்ணீர் வியாபாரம் செய்கிறார். நடனக்குழு ஒன்றையும் நடத்துகிறார். அங்கு அமலாபாலையும் அவர் தந்தை சுரேசையும் சந்திக்கிறார். விஜயுக்கும் அமலாபாலுக்கும் காதல் உண்டாகி திருமணம் வரை செல்கிறது. திருமணத்திற்கு விஜயின் அப்பாவை சந்தித்தே ஆகவேண்டும் என சுரேஷ் சொல்ல,சொல்லாமல் கொள்ளாமல் எல்லோரும் மும்பை வருகின்றனர். அங்கே கல்யாண விசயமாக பேசவரும் சத்யராஜை நோக்கி அமலாபாலும் சுரேஷும் துப்பாக்கியை காட்டி கைது செய்கிறார்கள். இருவரும் சிபிஐ அதிகாரிகள் என படம் விரிகிறது.

கைது செய்து கொண்டு செல்லும் வழியில் குண்டுவைத்து கொல்லப்படுகிறார் சத்யாஜ். அவரைக் கொன்றது யார் எனக் கேள்வி வர... முன்பு சத்யராஜ் ஒரு தாதாவை கொன்றார் அல்லவா...அவரோட மகன்தான். பின்னர் அப்பா விட்டுவிட்டுப் போன அந்த மக்கள் காவலன் பணியை மகன் விஜய் தொடர்ந்து செய்ய, தலைவன் ஆகிறார். கடைசியில் அப்பாவைக் கொன்ற அந்த வில்லனை கொல்கிறார்.

முதல் பாதி படம் தான் படத்தை தூக்கி நிறுத்தியது எனலாம்.காரணம் இடைவேளைக்கு பின்பு வரும் காட்சிகள் எவ்வளவு முயன்றாலும் பழைய படங்களை ஞாபகத்துக்கு கொண்டு வந்து விடுகின்றன.

விஜய் விஜய் தான் என்று எல்லோருமே ஒத்துக்கொள்ளும் விதமாக என்ன ஒரு துள்ளல் நடனம், ஆக்சன் .. வசூல் சக்கரவர்த்தி நீங்கள் தான் என இந்த படத்திலும் நிருபித்து விட்டீர்கள் விஜய், சாரி தலைவா.. இந்திய ஹீரோக்களில் நடனத்தில் தான் தான் சிறந்தவர் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார் விஜய். முதல் பாதியில் நடனம் விசில் பறக்கிறது. தமிழ் பசங்க பாடலில் அது ஓவராக தூள் பறக்கிறது.

மைனா அமலாபாலா இது என்று கேட்கின்ற மாதிரி அழகை மாற்றி மெருகேற்றி வந்திருக்கிறார். நடிப்பிலும் நல்ல முன்னேற்றம்.

சந்தானம் சொல்லி கொள்ளும்படி ஒன்றும் இல்லை, வழக்கம் போல வேறுப்பெத்துகிறார். சாம் அண்டர்சன் இடையே வந்து கலகலப்பாக்கி செல்கிறார்.

. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கண்ணுக்கு விருந்து படைத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஆஸ்திரேலிய அழகை கண்முன் நிறுத்திவிடுகிறார். அழகான பாடல்கள், அபாரமான நடனம் என்று இடைவேளை வரை படம் சில்லென நடை போடுகிறது.

பாடல்களில் "வாங்கண்ணா வணக்கங்கண்ணா' பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும், 'தலைவா'பாடலும், 'யார் இந்த சாலையோரம்', 'தமிழ் பசங்க' பாடல்களும் சொக்கும் ரகம். ஜி வி பிரகாஷ் கூட ஒரு பாடலில் வந்து நடனமாடி செல்கிறார்.

பழைய படங்களை நினைவுக்கு கொண்டு வரும் காட்சிகள், இயக்குனர் இந்த படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதில் தெளிவில்லாத குழப்பம் என படம் முழுக்க குறைகள் இருந்தாலும் விஜய்க்கு நிச்சயம் இது ஒரு வெற்றி படமே ... ஆனால் அவரின் முந்தைய படமான துப்பாக்கியை ஒப்பிட்டால் ... பொறுங்கள் பார்க்கலாம்,

தலைவா... விஜய் ரசிகர்களுக்கு மாஸ் படம்.. பொது மக்களுக்கு ரசிக்கும் படம் ..

Labels:



Leave A Comment:

Powered by Blogger.